அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

வாருங்கள் சத்திய மார்க்கத்தில் நுழைவோம். அன்புடன் வரவேற்கிறோம். முஹம்மது ஜுபைர் சிராஜி கணியூரீ

சனி, 29 டிசம்பர், 2012

அடுத்த விவாத விளையாட்டிற்கு தயாராகி விட்டார் அண்ணன். பராக்...பராக்!!


இறைத்தூதர் ஸல்... அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இன்றைய அல்லாஹ்வை நம்பிய சுன்னத் ஜமாஅத்காரர்களை விட மோசமான யூத-கிறிஸ்தவ-முஸ்ரிக்குக்களை சந்தித்தார்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஈசா நபி அலை... அவர்கள் தொடர்பாக நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் ஒரு முபாஹலாவுக்கு தயாரானது நீங்கலாக, வேறு யாருடனும் விவாதம் என்றோ  முபாஹலா என்றோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை. அழகிய உபதேசங்கள் வாயிலாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்த்தார்கள். ஆனால் அண்ணனும் அவரது தம்பிகளும் வாயைத் திறந்தாலே விவாதத்திற்கு வர்றியா என்று ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணனின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்த கோட்டார் விவாதம், ஜெபமணி விவாதம் உள்ளிட்ட சில விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அவரின் அடுத்தடுத்த விவாதங்களில் தனது கருத்தை நிலைநாட்டிட வார்த்தைகளை பிடித்து தொங்குவதும், தான் தப்பிப்பதற்காக ஹதீஸை பொய்யாக்குவதும், மத்ஹபை மறுக்கிறேன் என்ற பெயரில் மத்ஹபை ஆதரிக்கும் அறிஞர்கள் கூட அறியாத, மக்களின் பயன்பாட்டில் இல்லாத மத்ஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசங்களை பற்றியே பேசி நேரத்தைக் கழிப்பதும், ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக பால்குடி சம்மந்தப்பட்ட ஹதீஸை விளக்குகிறேன் என்ற பெயரில் படு ஆபாசமாக வர்ணித்து அந்த ஹதீசோடு சம்மந்தப்பட்ட சஹாபாக்களை இழிவுபடுத்துவதும் என அண்ணன் அடிக்கும் கூத்துக்களும், விவாதம் முடிந்ததோ இல்லையோ வெற்றி.. வெற்றி.. இமாலய வெற்றி என்று அவரது தம்பிகள் அடித்துக்கொள்ளும் பெருமைகளும் அண்ணனின் விவாதம் என்றாலே மக்களுக்கு வெறுப்பைத் தந்தது.

அண்ணனின் விவாதம் என்றாலே பெண்கள் எல்லாம் சேனலை மாற்றி விட்டு அண்ணன் விவாதத்தை விட சீரியல் எவ்வளவோ பரவாயில்லை என மாற்றி விடுவதால், டிவியில் ஒளிபரப்பும் போது வாய்ஸ் கட் பண்ணிவிட்டு ஊமைப்படம் காட்டினார்கள். அந்த அளவுக்கு அண்ணனின் விவாதங்கள் அடல்ஸ் ஒன்லியாக இருப்பதால் தம்பிகளும் ரசித்து ருசித்து அண்ணனின் விவாதத்திற்கு டிக்கெட்டிற்கு அலைமோதுகிறார்கள். மத்ஹப் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், நாத்திகர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் நம்பி டிக்கெட் எடுக்கலாம். கண்டிப்பாக தம்பிகளின் தேவை அண்ணனால் நிறைவேற்றப்படும்.

எங்கோ யாரென்றே தெரியாமல் இருந்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாளியுடன் விவாத விளையாட்டு விளையாடியே அவரை பிரபல்யமாக்கியதன் மூலம் மங்கிக் கிடந்த தர்காவை மீண்டும் ஒளிபெற செய்தார் அண்ணன். சுப்ஹான  மவ்லிது குப்பையில் வீசவேண்டிய ஒன்று என்று மேடையில் முழங்கிவிட்டு, களியக்காவிளை விவாதத்தில் சுப்ஹான மவ்ளிதைப் பற்றி வாய் திறக்காமல் நாகூர் குளத்தில் மூழ்கியே போனார். அண்ணனின் இந்த செயலால் பார்த்தீகளா? பீஜெயால் சுப்ஹான மவ்லிதை ஷிர்க் என நிரூபிக்க முடியாமல் சாஹுல்ஹமீது மவ்ளிதுக்கு தாவிட்டார்  என்று கூறியே ஜமாலி முன்பை விட அதிகமாக மவ்லிதை தூக்கிப் பிடித்தார்.

இறைவனுக்கு உருவம் உண்டு என நிரூபிக்கப் போனவரிடம், இறைவன் ஆனா? பெண்ணா? அலியா? ஒற்றைக்கால் உள்ளவனா?என்றெல்லாம் ஜமாலி கேட்ட கேள்விகளை கண்டு திணறி விவாதம் முடிந்த கையோடு வீட்டிற்குள் புகுந்து கதவை சாத்தியவர், நான் ஆய்வு செய்யப்போகிறேன்; ஆறு மாசத்திற்கு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். பிறகு அவசரமாக வந்து கிறிஸ்தவர்களோடு விளையாடி பைபிள் ஆபாசங்கள்  என்று பக்கம் பக்கமாக பேசி, ஒரு ஹதீஸை பொய்யாக்கி விட்டு சென்றார் இதுதான் அண்ணன் விவாதத்தினால் கண்ட பலன்.

இப்போது சில மாதங்கள் கடந்த நிலையில், அண்ணனை சைபுதீன் ரசாதியிடம் மாட்டி விட்டு விட்டார்கள் அவரது தம்பிகள். விவாத ஒப்பந்தம் போட சில்லறைகளை அனுப்பக் கூடாது நீர் தான் வரவேண்டும் என்று சைபுதீன் ரசாதி கிடுக்கிப் பிடி போட வேறு வழியின்றி கிறுகிறுத்துப் போய் ஒப்புக்கொண்டிருக்கிறார் அண்ணன். இம்மாத இறுதியில் மரைக்காயர்பட்டினத்தில் மரைக்காயர் அண்ணன் விவாத ஒப்பந்தம் செய்ய பரிவாரங்களோடு செல்கிறார். மற்ற விவாதத்தை விட இந்த விவாதம் அண்ணனுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் இதில் மார்க்கம் பேசுவதற்கு தகுதியானவர் யார் பீஜேயா? சைபுதீன் ரசாதியா? என்பதுதான் பிரதான தலைப்பு. இதில் தோற்பவர்கள் மக்கள் மத்தியில்பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் மார்க்கம் பேசக்கூடாது மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது என்பதுதான் ரசாதியின் நிபந்தனையாகும். இருவரில் கரைசேரப் போவது யாரோ? ஆனாலும் அண்ணனின் வார்த்தை ஜாலம் அவரை காப்பாற்றி விடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறர்கள் அவரது தம்பிகள்.

நம்மைப் பொறுத்தவரையில் இரண்டுபேரும் ஒன்றுதான். சைபுதீன் ரசாதி மத்ஹப்  வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அண்ணனோ தனது அறிவு மீது கொண்ட வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அல்லாஹ்தான் இந்த இரு குழப்பவாதிகளிடம் இருந்து மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற வேண்டும்.

அண்ணனுக்கும் -ரசாதிக்கும் நடந்த கடித பரிமாற்றத்தில் இருவரும் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவர்களது தரத்தை நிரூபிக்கும் சான்றுகள். மற்றும் இன்னும் பல தகவல்கள் விரைவில்...

--
அப்துல்முஹைமின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக