அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

வாருங்கள் சத்திய மார்க்கத்தில் நுழைவோம். அன்புடன் வரவேற்கிறோம். முஹம்மது ஜுபைர் சிராஜி கணியூரீ

சனி, 29 டிசம்பர், 2012

பி.ஜே.தொழாததற்கு த.மு.மு.க.வே காரணம்! அதிரையில் அஸ்ரப்தீன் பிர்தவ்சி விளக்கம்!

அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தக்லித் ஜமாத்தின் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஷாஜஹான் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் எழுந்து ' உங்களின் தலைவர் பி.ஜே.பல வருடங்களாக பஜர் தொழுவதில்லை என்றும் உங்களின் பொருளாளர் அன்வர் பாஷா புகைப் பிடிப்பவராகவும் இருக்கும் நிலையில்,  ததஜ வில் இருக்கிறார்களே என   கேட்க அண்ணனை அப்படியே தக்லித்  செய்யும் மிமிக்ரி நடிகர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அசடு வழிந்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டினர்.
த.மு.மு.க.வில் இருக்கும் போது அவரது பாதுகாப்பு கருதி அவர் தொழ வர வேண்டாம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. அவர்  தொழாததர்க்கு அவர்கள்தான் காரணம் ! பி.ஜே.தொழவில்லை என்றால் அவர் நரகம் செல்வார்! அது குறித்து யாரும் கவலைப் பட வேண்டியதில்லை!  என்றும் அன்வர் பாஷா சிகரெட் பிடிப்பதை யாரும் பார்க்கவில்லை  சால்ஜாப்பு கூறினார்.

  • நமக்கு எழும்   கேள்விகள் யாதெனில் 
  • மார்க்க கடமையான தொழுகையை மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக விடலாமா?
  • தமுமுக வில் இருந்து வெளியில் வந்து பரிசுத்த இயக்கம் கண்ட பிறகாவது தொழுது   இருக்கலாமே  ? 
  • பாதுகாப்பு காரணம் எனில், இப்போது துப்பாக்கி ஏந்திய காவலர்கள்  வழங்கிய இந்த ஒரு வருடத்திலாவது தொழ வந்திருக்கலாமே?
  • அல் உம்மா, விடியல், போன்ற முஸ்லிம் இயக்கங்களால் உயிருக்கு ஆபத்து' எனக் கூறும் நீங்கள் மற்ற நான்கு வக்துக்களும் வரலாமே? 
  • மற்ற விசயங்களுக்காக அலுவலகத்திற்கு வரும் போதும், தேர்தல் நேரத்தில் அரசியல்வதிகளுக்காக தெருத் தெருவாக பிரசாரம் செய்யும் போதும் இல்லாத பாதுகாப்பு பயம் அல்லாஹ்வை தொழ பள்ளிக்கு வரும் போது மட்டும் வருவதேன்?
  • அவர் தொழா விட்டால் அவர் நரகத்திற்கு செல்வார் ! மற்றவர்கள் கேட்க தேவையில்லை என்றால் வட்டி வாங்குபவன் ,வரதட்சனை வாங்குபவன், மவ்ளுது ஓதுபவன், பாதிஹா ஓதுபவன் யாரையும் நீங்கள் திட்ட  வேண்டியதில்லையே?
  •     நீங்கள்   உங்களை  மறந்து விட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகின்றீர்களா? எனும் குரான் வசனத்தின் படி முதலில் பி.ஜே.வுக்கு தொழுகையை ஏவி அன்வர் பாஷா சிகரெட்டை விட்டும் தடுக்க த.தஜ.நிர்வாகிகள் முன் வர வேண்டாமா?
  • தொழுகையை நிலை நாட்டி ஜகாத் கொடுப்பவர் தான் பள்ளிவாசலை நிர்வகிக்க வேண்டும்! என அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான் அதனால் தொளுகையில்லாத சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகள் தகுதியற்றவர்கள் எனக் கூறிய ததஜ, இப்போது தொழுகையை நிலை நாட்டாத ஒருவரை 600 பள்ளிவாசல்களின் [ தமிழகம முழுதும் ததஜ விற்கு அறுநூறு பள்ளியாம்!  இதுவே பொய்] நிர்வாகியாக, பரிசுத்த இயக்கத்தின் தலைவராக வைத்திருப்பது சரியா?
  • பள்ளிவாசல்களுக்கு தலைவராக இல்லை ! என்றாலும் ' அசர் போகும் , மக்ரிப் போகும் மிலாத் ஊர்வலமும் போகும் ஒருத்தனும் தொழ மாட்டன்! இவர்கள் எல்லாம் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களாம்! என மீலாத் கமிட்டி தலைவர்களை விமர்சித்த பி.ஜே, தொழுகையை நிலை நாட்டுவதில்லையே?  இவர் ஒரு இஸ்லாமிய இயக்கத் தலைவரா? 
  • பொருளாளர் அன்வர் பாஷா சிகரட் பிடிப்பது ஊர் அறிந்த விஷயம்! பி.ஜே.முன்னாலேயே   புகை பிடிக்கக் கூடியவர் ! இல்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா?
  • பி.ஜே. தொழுகையை நிலை நாட்டுவதில்லை என்று அபு அப்துல்லாஹ் தொடங்கி அவரோடு நெருக்கமாக இருந்த அன்றைய, இன்றைய மாநில நிர்வாகிகள் வரைக்கும் அனைவருக்கும் தெரியும்!  இல்லை  என இன்றைய மாநில நிர்வாகிகள் அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா? 
இந்த விசயத்தில் இன்றைய மாநில நிர்வாகிகள் கூட பி.ஜே.விற்கு 
வக்காளத் வாங்க மாட்டார்கள் ஏன் எனில் அவர்களுக்கே தெரியும்! 'அது அவருக்கும் அல்லாஹ்விற்கும் உள்ளது" என்று   தான் கூற முடியுமே தவிர வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை!  எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் உள்ளது என இறுமாப்போடு பேசிய அண்ணனிடம் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது!
    - இப்னு  ஹுசைன்!  

பன்றி நேசனின் முன்னுக்குப்பின் முரணான பத்வா!

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு,


நபி(ஸல்) அவர்கள் வியாபரம் தடை செய்த ஒன்றை அதை கூடும் என பத்வா கொடுக்கிறார்கள்,
 ஹதிஸை பற்றி எந்த ஞானமும்  இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல் மார்க்கத்தில்
இல்லாதத்தை புகுத்தியுள்ளார்கள்.இவர்களின் முனாபிக் தனத்தை இன்னும் நீங்கள்
அறியாமல் மூடர்களாக உள்ளீர்கள்,


நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
 மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை
செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!
செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம்
மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப்
 பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது!
அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை
சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை
உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு
அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள் (இமாம் புஹாரி(ரஹ்)

இதில் தெள்ள தெளிவாக பன்றியை வியாபரம் செய்யக் கூடாது என தெளிவாக
அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் முனாபிக் பிஜே, பன்றியின் தோல் வியாபரம் செய்யலாம்
எனப் பத்வா வழங்கியுள்ளார., அதுவும்  சரி என நம்பும் அவர்களின் கண்மூடித்தனமான கூட்டம்,

பன்றியே வியாபரம் செய்ய தடுக்கப்பட்டிருக்கும் போது பன்றியுள்ள தோல் மட்டும் எவ்வாறு
வியாபரம் செய்ய முடியும்.பன்றி உள்ள எதையும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெளிவாக
கூறப்பட்ட பின்னர் ஆனால் முனாபிக் பீஜே அதை வியாபரம் செய்யலாம் என்பது எந்த
வகையில் நியாயம்,அறிவுடையோருக்கு விடை கிடைக்கும்

ஆனால்  பீஜே  அன்று:

பீஜேவே, பன்றியும்,பன்றியில் உள்ள எல்லா பாகமும் ஹராம் எனக் கூறும் வீடியோவை கீழ் 
உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும், பார்க்கவும் வீடியோ நேரம் 5:10 வினாடிகளிலிருந்து....





ஆனால் அவரின் பத்வாவுக்கு எதிராக அவரே தற்போது பன்றியின் தோல் ஹலால் எனக் கூறும்
பத்வாவை அவரது இணையத் தளத்தில் காணுங்கள்:     
http://onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/panri_thol_viyabaram/

பன்றியின் இரத்தம் ஹலால் எனும் பத்வா பார்க்க:

http://www.youtube.com/watch?v=mOkEC5vlNQs

தற்போது அறிவீர்கள் பீஜே ஒரு மாபெரும் பொய்யன் என்று


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மது (1797)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால்
தூய்மை அடைந்துவிடும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (596)

நமது பதில்:

இதறகு முன் உள்ள ஹதிஸை மறுத்து வெளியிட்டுள்ளார்கள்,,நபி(ஸல்) அவர்கள் செத்த
ஆடுக்கு விதிவிலக்கு கொடுத்தார்கள், கிழே உள்ள ஹதிஸை தெளிவாக படித்திற்கள் என்றால்
உங்களுக்கு நன்றாக புரியும், எப்படி மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள் என்பதை
கண்டறியுங்கள்.

(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று
(செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து
சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனைடயக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை
அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்,
இமாம் புஹாரி(ரஹ்))

 மேல் உள்ள இந்த ஹதிஸை மறைத்து அதற்கு பின் உள்ள  ஹதிஸின் பகுதியை மட்டும்
மறைத்து கூறியுள்ளார்கள். இது இவர்களுக்கு புதியதல்ல


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

நமது பதில்:

இதில் எல்லா என்ற வார்த்தை வந்துள்ளதால் அது பன்றியும் பொருந்தும் எனக் கூறுகின்றார்கள்,
 அதனால் அது வியாபரம் செய்யலாம் எனக் கூறும் சொல், இது இவர்களின் அறியாமை வாதம்
ஆகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்ன உங்களுக்கு நன்றாக புரியும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள்
 என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்)).

இதில் வெளிப்படையாக பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் திக்ரு
செய்வார்கள் எனப் பொருள் கிடைக்கும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அது
தூய்மையான நிலையில் தவிர வேறெந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை
நான் வெறுக்கிறேன் என மற்றொரு வழியில் நிருபிக்கப்பட்டுள்ளது

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி)
அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு
செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான்
வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்
இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம் 
முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),
இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:

ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின்
பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.

இதிலிருந்து,

எல்லா நிலை என்பது நபி(ஸல்)  அவர்கள் எல்லா நிலையில் திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்கள் தூய்மையான நிலையில் இருப்பார்கள்,

அதே போல் இதில் எல்லா தோல் எனக் கூறப்பட்டாலும் அது பன்றியை தோல் தவிர, ஏனென்றால்
ஹரமான  பன்றியை விற்பனைச் செய்யகூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள போது
பன்றித் தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும். பன்றித் தோல், பன்றியில் இல்லை
 எனக் கூறமுடியமா? அது எவ்வாறு வியாபரத்திற்கு பொருந்தும்.

எனவே பன்றியும், பன்றித்தோலும், பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது

நன்றி -முஹம்மத் அப்பாஸ்

அடுத்த விவாத விளையாட்டிற்கு தயாராகி விட்டார் அண்ணன். பராக்...பராக்!!


இறைத்தூதர் ஸல்... அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இன்றைய அல்லாஹ்வை நம்பிய சுன்னத் ஜமாஅத்காரர்களை விட மோசமான யூத-கிறிஸ்தவ-முஸ்ரிக்குக்களை சந்தித்தார்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஈசா நபி அலை... அவர்கள் தொடர்பாக நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் ஒரு முபாஹலாவுக்கு தயாரானது நீங்கலாக, வேறு யாருடனும் விவாதம் என்றோ  முபாஹலா என்றோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை. அழகிய உபதேசங்கள் வாயிலாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்த்தார்கள். ஆனால் அண்ணனும் அவரது தம்பிகளும் வாயைத் திறந்தாலே விவாதத்திற்கு வர்றியா என்று ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணனின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்த கோட்டார் விவாதம், ஜெபமணி விவாதம் உள்ளிட்ட சில விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அவரின் அடுத்தடுத்த விவாதங்களில் தனது கருத்தை நிலைநாட்டிட வார்த்தைகளை பிடித்து தொங்குவதும், தான் தப்பிப்பதற்காக ஹதீஸை பொய்யாக்குவதும், மத்ஹபை மறுக்கிறேன் என்ற பெயரில் மத்ஹபை ஆதரிக்கும் அறிஞர்கள் கூட அறியாத, மக்களின் பயன்பாட்டில் இல்லாத மத்ஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசங்களை பற்றியே பேசி நேரத்தைக் கழிப்பதும், ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக பால்குடி சம்மந்தப்பட்ட ஹதீஸை விளக்குகிறேன் என்ற பெயரில் படு ஆபாசமாக வர்ணித்து அந்த ஹதீசோடு சம்மந்தப்பட்ட சஹாபாக்களை இழிவுபடுத்துவதும் என அண்ணன் அடிக்கும் கூத்துக்களும், விவாதம் முடிந்ததோ இல்லையோ வெற்றி.. வெற்றி.. இமாலய வெற்றி என்று அவரது தம்பிகள் அடித்துக்கொள்ளும் பெருமைகளும் அண்ணனின் விவாதம் என்றாலே மக்களுக்கு வெறுப்பைத் தந்தது.

அண்ணனின் விவாதம் என்றாலே பெண்கள் எல்லாம் சேனலை மாற்றி விட்டு அண்ணன் விவாதத்தை விட சீரியல் எவ்வளவோ பரவாயில்லை என மாற்றி விடுவதால், டிவியில் ஒளிபரப்பும் போது வாய்ஸ் கட் பண்ணிவிட்டு ஊமைப்படம் காட்டினார்கள். அந்த அளவுக்கு அண்ணனின் விவாதங்கள் அடல்ஸ் ஒன்லியாக இருப்பதால் தம்பிகளும் ரசித்து ருசித்து அண்ணனின் விவாதத்திற்கு டிக்கெட்டிற்கு அலைமோதுகிறார்கள். மத்ஹப் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், நாத்திகர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் நம்பி டிக்கெட் எடுக்கலாம். கண்டிப்பாக தம்பிகளின் தேவை அண்ணனால் நிறைவேற்றப்படும்.

எங்கோ யாரென்றே தெரியாமல் இருந்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாளியுடன் விவாத விளையாட்டு விளையாடியே அவரை பிரபல்யமாக்கியதன் மூலம் மங்கிக் கிடந்த தர்காவை மீண்டும் ஒளிபெற செய்தார் அண்ணன். சுப்ஹான  மவ்லிது குப்பையில் வீசவேண்டிய ஒன்று என்று மேடையில் முழங்கிவிட்டு, களியக்காவிளை விவாதத்தில் சுப்ஹான மவ்ளிதைப் பற்றி வாய் திறக்காமல் நாகூர் குளத்தில் மூழ்கியே போனார். அண்ணனின் இந்த செயலால் பார்த்தீகளா? பீஜெயால் சுப்ஹான மவ்லிதை ஷிர்க் என நிரூபிக்க முடியாமல் சாஹுல்ஹமீது மவ்ளிதுக்கு தாவிட்டார்  என்று கூறியே ஜமாலி முன்பை விட அதிகமாக மவ்லிதை தூக்கிப் பிடித்தார்.

இறைவனுக்கு உருவம் உண்டு என நிரூபிக்கப் போனவரிடம், இறைவன் ஆனா? பெண்ணா? அலியா? ஒற்றைக்கால் உள்ளவனா?என்றெல்லாம் ஜமாலி கேட்ட கேள்விகளை கண்டு திணறி விவாதம் முடிந்த கையோடு வீட்டிற்குள் புகுந்து கதவை சாத்தியவர், நான் ஆய்வு செய்யப்போகிறேன்; ஆறு மாசத்திற்கு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். பிறகு அவசரமாக வந்து கிறிஸ்தவர்களோடு விளையாடி பைபிள் ஆபாசங்கள்  என்று பக்கம் பக்கமாக பேசி, ஒரு ஹதீஸை பொய்யாக்கி விட்டு சென்றார் இதுதான் அண்ணன் விவாதத்தினால் கண்ட பலன்.

இப்போது சில மாதங்கள் கடந்த நிலையில், அண்ணனை சைபுதீன் ரசாதியிடம் மாட்டி விட்டு விட்டார்கள் அவரது தம்பிகள். விவாத ஒப்பந்தம் போட சில்லறைகளை அனுப்பக் கூடாது நீர் தான் வரவேண்டும் என்று சைபுதீன் ரசாதி கிடுக்கிப் பிடி போட வேறு வழியின்றி கிறுகிறுத்துப் போய் ஒப்புக்கொண்டிருக்கிறார் அண்ணன். இம்மாத இறுதியில் மரைக்காயர்பட்டினத்தில் மரைக்காயர் அண்ணன் விவாத ஒப்பந்தம் செய்ய பரிவாரங்களோடு செல்கிறார். மற்ற விவாதத்தை விட இந்த விவாதம் அண்ணனுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் இதில் மார்க்கம் பேசுவதற்கு தகுதியானவர் யார் பீஜேயா? சைபுதீன் ரசாதியா? என்பதுதான் பிரதான தலைப்பு. இதில் தோற்பவர்கள் மக்கள் மத்தியில்பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் மார்க்கம் பேசக்கூடாது மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது என்பதுதான் ரசாதியின் நிபந்தனையாகும். இருவரில் கரைசேரப் போவது யாரோ? ஆனாலும் அண்ணனின் வார்த்தை ஜாலம் அவரை காப்பாற்றி விடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறர்கள் அவரது தம்பிகள்.

நம்மைப் பொறுத்தவரையில் இரண்டுபேரும் ஒன்றுதான். சைபுதீன் ரசாதி மத்ஹப்  வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அண்ணனோ தனது அறிவு மீது கொண்ட வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அல்லாஹ்தான் இந்த இரு குழப்பவாதிகளிடம் இருந்து மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற வேண்டும்.

அண்ணனுக்கும் -ரசாதிக்கும் நடந்த கடித பரிமாற்றத்தில் இருவரும் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவர்களது தரத்தை நிரூபிக்கும் சான்றுகள். மற்றும் இன்னும் பல தகவல்கள் விரைவில்...

--
அப்துல்முஹைமின்.

புதன், 19 டிசம்பர், 2012

சம்சுதீன் காசிமியின் புதிய குரான் part4


தப்பு தப்பாக ஓதப்பட்ட குரான் வசங்கள்,தவறான வஹாபிச கொள்கைகள் நிறைந்த சம்சுதீன் காசிமியின் சொற்பொழிவிற்கு ஆதாரப்பூர்வமான மறுப்புரை.விடியோ கிளிப்புடன்

சம்சுதீன் காசிமியின் புதிய குரான் part 3


தப்பு தப்பாக ஓதப்பட்ட குரான் வசங்கள்,தவறான வஹாபிச கொள்கைகள் நிறைந்த சம்சுதீன் காசிமியின் சொற்பொழிவிற்கு ஆதாரப்பூர்வமான மறுப்புரை.விடியோ கிளிப்புடன்

சம்சுதீன் காசிமியின் புதிய குரான் part 2


தப்பு தப்பாக ஓதப்பட்ட குரான் வசங்கள்,தவறான வஹாபிச கொள்கைகள் நிறைந்த சம்சுதீன் காசிமியின் சொற்பொழிவிற்கு ஆதாரப்பூர்வமான மறுப்புரை.விடியோ கிளிப்புடன்

சம்சுதீன் காசிமியின் புதிய குரான் part 1


தப்பு தப்பாக ஓதப்பட்ட குரான் வசங்கள்,தவறான வஹாபிச கொள்கைகள் நிறைந்த சம்சுதீன் காசிமியின் சொற்பொழிவிற்கு ஆதாரப்பூர்வமான மறுப்புரை.விடியோ கிளிப்புடன்

சனி, 1 டிசம்பர், 2012

இமாம் ஹப்ஸ் என்பர் யார் வஹாபிகளின் முகத்திரை கிழிகிறது 5


TNTJ பொய்யர்கள் கயவர்கள் முனாபிக்குகளின் மோசடி அம்பலம்


TNTJ நடித்த பாண்டி பாவா நாடகத்துக்கு பகிரங்க சவால்


சத்தியத்துடன் அசத்தியத்தை கலக்கும் வஹாபிகளின் திருட்டு மூளை