அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

வாருங்கள் சத்திய மார்க்கத்தில் நுழைவோம். அன்புடன் வரவேற்கிறோம். முஹம்மது ஜுபைர் சிராஜி கணியூரீ

புதன், 21 நவம்பர், 2012

குவைத் வாழ் PJ வின் பித்தர்களே நீங்கள் தூயவான்கள் என்பதை நிருபியுங்கள்!

ஏக இறைவனின் திரு நாமத்தால்...
பொய்ப்பித்தன் pj வின் குவைத் வாழ் பித்தர்கள் குவைத்தில் ஒரு பள்ளிவாசலில் கூட்டம் நடத்திவிட்டு மாபெரும் பொது கூட்டம் நடத்தப்பட்டதாக செய்தி ஒன்றை படு
வேகமாக பரப்பினர் அபகரிக்கப்பட்ட வார இதழில். குவைத் நாட்டின் மைந்தர்களுக்கே  பொது கூட்டம் நடத்த அனுமதி இல்லாத பொழுது இந்திய நாட்டு மைந்தர்களான,பொய்ஜே வின் பித்தர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? என்ற கருத்தை பிரதானமாக கொண்டு இந்திய
தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைவர் சகோதரர் முகவை அப்பாஸ் அவர்கள்
கட்டுரை ஒன்றை வரைந்தார்.
 
நடத்தப்பட்டது பொதுக்கூட்டம் தான் என்பதை நிரூபிக்க வக்கற்றவர்கள் வழக்கமாக முனை மழுங்கி போன ஆயுதத்தை தான் [பாலியல்,ஊழல்]கையில் எடுத்துள்ளனர். இவர்கள் கையில் எடுத்த இந்த குப்பைகளை தள்ளிவிட்டு மற்ற விஷயத்திற்கு வருவோம்.
தங்களின் பகுத்தறிவை பொய்யரிடம் அடகு வைத்த இவர்கள் தங்களின் கட்டுரையில்
நம்மை குறித்த அவதூறுகளை அள்ளி வீசி உள்ளனர்.அது குறித்து பார்பதற்கு
முன் பொய்யர் பித்தர்களான இவர்களிடம் தங்களின் கட்டுரை குறித்த ஒரு
கருத்தையும் முன் வைக்கிறோம்.அதற்க்கு பதிலையும் எதிர்பார்க்கிறோம்.

தனி மனிதன் ஒருவன் எழுதுவது போல் ஆரம்பமாகிறது இவர்களின் கட்டுரை. ஆனால்

முடிவில் ரவ்தா கிளை என்று போட்டுள்ளார்கள். எழுதிய தனி மனிதனுடைய பெயரும் அதில்
இல்லை. முடித்தவர்கள் பெயரும் அதில் இல்லை. ஏன் இந்த இரட்டை நிலை? எந்த
விமர்சனமாக இருந்தாலும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு எங்கள் பெயரில் துணிச்சலாக எழுதுகிறோமே! அதுபோன்று தங்களை
அடையாளப்படுத்துவதில் என்ன தயக்கம்? சத்தியம் இவர்களிடம்
இல்லை என்பதால்தானே..  இந்த திருகு தாளம்..? சரியான பயிற்ச்சியை தான் தனது
பித்தர்களுக்கு வழங்கி இருக்கிறார் அந்த வாய்மையாளர்[!?]
 
 பெயர் போடாமல் ஓடி ஒளிந்ததற்கு  என்ன பதில் சொல்லப்போகிறார்கள்..? மறதி என்று சொல்லி
மழுப்ப போகிறார்களா..? அல்லது  முகவரியோடு முன்னாடி  வருகிற பழக்கம் எங்கள் தலைவருக்கே இல்லை என்று சொல்லப் போகிறார்களா?  பொறுத்து இருந்து பார்ப்போம் இன்ஷா
அல்லாஹ். இப்பொழுது விஷயத்துக்கு வருவோம்..
 அவதூறு ஒன்று
ஆபாசத்திற்கும்,அவதூறுகளுக்கும் அஸ்த்திவாராமான பொய்ஜே வின் பொய்யன்டிஜே  என்ற
நீலததளத்தில்  தான் இவர்களின் மறுப்புக் கட்டுரைவெளியாகி
உள்ளது. அதில், அபுபைசலை புகையிலை மன்னன் என்றும்,எழுத்து வியாபாரி
என்றும் கொச்சைபடுத்தி உள்ளனர். அபூபைசல்  பாக்கர் அணியில் இணைந்த பிறகுதான்
அவர் புகையிலை பயன்படுத்தினாரா? அல்லது தக்லீத் ஜமாஅத்தில் இருந்த போது பயன்படுத்தினரா? அப்படி அவர் புகையிலை பயன்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், குவைத் மண்டல தக்லீத் ஜமாத்திற்கு செயலாளராக வைத்து அழகு பார்த்தீர்களே! அதற்கு பின்னால் அவரை மாநில செயலாளராகவும், அபகரிக்கப்பட்ட இதழின் பொறுப்பாசிரியராகவும் வைத்திருந்தீர்களே! அப்போது புகையிலை பயன்படுத்தியது உங்களின் புகைந்துபோன தக்லீது மூளைக்கு தெரியவில்லையா? மேலும் இப்போது புகையிலை புண்ணாக்கு  என்று புலம்பும் பொய்யரின் பித்தர்களே! இப்போதும் அபூபைசல் புகையிலை பயன்படுத்துவதை நிர்ரூபிக்கத் தயாரா?
 
அதே போல் பாக்கரோடு இணைந்த பிறகுதான்
எழுத்து வியாபாரி ஆனாரா? உங்கள் வாதப்படி எழுத்து வியாபாரியான அவரை வைத்து உணர்வில் சம்பாத்தித்தீர்களே! அப்போது உங்களின் தக்லீது மூளை மங்கியிருந்ததா? மேலும்,  பொய்யன் பொய்ஜே வைபோல் தனது எழுத்தை விற்று அவர்
அடைந்த ஆதாயம் என்ன? என்பதையெல்லாம் நிருபிக்கும் பொறுப்பை பொய்யரின் பித்தரான   உங்கள்மீது முதலாவதாக சுமத்துகிறோம்.
அவதூறு இரண்டு
அபுபைசலின் தம்பியாகிய சாதிக் சதாம் என்பவர் குவைத்தில் ஒரு பிட்
நோட்டீஸ் கொடுத்தாலும் அதை அரேபிய தொலைகாட்ச்சியில் பேட்டி கொடுத்ததாக
எழுதிவிடுவார் அபுபைசல் என்று அவதூறை வீசியுள்ளனர். உணக்ளைப் போல பள்ளிவாசல் நிகழ்ச்சியை மாபெரும் பொதுக்கூட்டம் என்று பச்சைப் பொய்யை  அபுபைசல் எப்பொழுது  எழுதினார்? என்பதையும் நிருபிக்கும்
பொறுப்பை பொய்யரின் பித்தரான உங்கள்மீது இரண்டாவதாக சுமத்துகிறோம்.
 அவதூறு மூன்று
நமது அமைப்பின் சார்பாக குவைத்தில் நடக்கும்  நிகழ்ச்சிகளை இணையதளத்தில்
வெளியிடுவதின் மூலம் அபுபைசல் தனது குடும்ப வருமானத்தை பெருக்கி
கொண்டார் என்ற அவதூறையும் வீசியுள்ளனர். இதையும் நிருபிக்கும் பொறுப்பை
பொய்யரின் பித்தரான உங்கள்மீது மூன்றாவதாக  சுமத்துகிறோம்.
 அவதூறு நான்கு
குவைத்தில் உள்ள இலங்கைத் தமிழ் பள்ளியிலும், மற்றுமொரு தமிழ்ப்
பள்ளியிலும் தனி மனிதரைத் தரம் தாழ்ந்து அவதூறு பரப்பி விநியோகிக்கப்
படும் பிரசுரங்களை வெளியிட்டால் கட்டி வைத்து அடிப்போம் என ஜும்மா
மேடையிலேயே இமாம் கண்டித்ததாகவும் அதை மீறியதால் அனைத்து இயக்க
சகோதரர்களும் ஒன்று கூடி எங்களை  விரட்டி அடித்ததாகவும் அவதூறுகளை அள்ளி
வீசியுள்ளனர்.
இவர்கள் கூறியபடி இந்த இரண்டு பள்ளியிலும் எங்களை கட்டி
வைத்து அடிப்பதாக எந்த இமாம் கூறினார்? எந்த பள்ளியில் கூறப்பட்டது? எங்களை
விரட்டி அடித்த சகோதர இயக்கங்கள் எவை? என்பதையும் நிருபிக்கும் பொறுப்பை
பொய்யரின் பித்தரான உங்கள்மீது நான்காவதாக  சுமத்துகிறோம்.
நாம் எடுத்து வைத்த அத்தனையையும் இவர்கள் நிருபிப்பதற்கு ஒரு வார கால
அவகாசம் அளிக்கிறோம். இதில் எந்த ஒன்றையும் இவர்கள் நிரூபிக்காத
பட்சத்தில்  அண்ணைனைப் போல  மகா  அயோக்கியர்கள்தான் என்பதை
ஒத்துக்கொள்ளவேண்டும். அதுமாத்திரமல்லாமல் இவர்கள்  ஒத்து கொள்ளாத
பட்ச நாங்களே இவர்களையும் அயோக்கியர்கள் என்று அழகாக அறிவிப்பு
செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
 
குறிப்பு :நேரமின்மையின் காரணமாக  சுருக்கமாக
வெளியிட்டு இருக்கிறேன்.

ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக